Thursday 5 October 2017

தமிழ்நாடு மணல் இணைய சேவை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

தமிழ்நாடு மணல் இணைய சேவை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

இத்தளத்தில் பதிவு செய்வதன்மூலம் கீழ்க்கண்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்கிறேன்.
1. நான் சமர்ப்பித்த (என்னால் சமர்ப்பிக்கப்பட்ட) அனைத்து விவரங்களும் மிகச் சரியானவை மற்றும் அவை அனைத்தும் என் சுயநினைவுடன் வழங்கப்பட்டவை. தகவல் ஏதேனும் தவறானதாகக் கண்டறியப்பட்டால், அதற்கான சட்ட விதிகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நான் அறிவேன்.
2. ஒரு குவாரியின் வரிசைக்குப் பதிவு செய்யப்பட்ட எனது லாரியை வரிசை நிறைவடையும் வரையில் வேறு குவாரிக்கோ அல்லது பதிவை ரத்து செய்யவோ முடியாது என்பதை நான் அறிவேன்.
3. எனது பதிவுச் சீட்டானது எனது மின்னஞ்சல் மற்றும் செல்லிடப்பேசி எண்ணிற்கு 30 மணி நேரத்திற்கு முன்னரே அனுப்பப்படும். அதுவரையில் காத்திருப்பு நேரம் என்பது தோராயமானதே என்பதை நான் அறிவேன்.
4. எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் அன்றே லாரியைக் கொண்டுவரவேண்டும். ரகசிய குறியீட்டுடனான முன்பதிவு ரசீது பெறும் வரை நான் அல்லது ஓட்டுனர் லாரியுடன் குவாரியில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நான் அறிவேன்.
5. குவாரி உற்பத்தி நிறுத்தம் ஏற்படும் தருவாயில், காத்திருப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பட்டியல் ஆகியவை தானாகவே ரத்து செய்யப்படும், மேலும் லாரிகளை மற்றொரு குவாரியில் பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்பதை நான் அறிவேன்.
6. மணல் எடுக்க வரும் தருணத்தில் ஒட்டுனர் மது அருந்தி இருந்தாலோ அல்லது லாரியின் பதிவு எண் முன்பதிவு சீட்டில் உள்ள எண்ணுடன் பொருந்தாவிட்டாலோ பதிவு ரத்து செய்யப்பட்டு கண்டிப்பாக மணல் வழங்கப்படமாட்டாது. இதே நிகழ்வு தொடர்ந்தால் லாரி தடை செய்யப்பட்ட லாரிகள் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதை நான் அறிவேன்.
7. லாரியின் முன்பதிவுகளும் உறுதிசெய்யப்பட்ட பதிவுகளும், தொழில்நுட்ப அல்லது எதிர்பாராத சூழ்நிலை காரணத்தினால் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம். அவ்வாறு ரத்து செய்யும் பட்சத்தில் லாரி உரிமையாளர்களுக்கு ஏற்படும் இழப்பிற்கு TNsand பொறுப்பேற்காது. லாரி முன்பதிவு செய்யப்பட்டதாலோ உறுதிசெய்யப்பட்டதாலோ மணல் கண்டிப்பாக வழங்கப்படும் என்பது நிச்சயம் இல்லை.

தமிழ்நாடு மணல் இணைய சேவை பற்றிய கேள்வி பதில்

தமிழ்நாடு மணல் இணைய சேவை பற்றிய கேள்வி பதில்ககள்:

பொதுவான கேள்விகள்:

உங்கள் பொதுவான அய்யங்களுக்கு எளிய விளக்கம்
தமிழ்நாடு மணல் இணைய சேவை என்றால் என்ன?
• தமிழ்நாடு மணல் இணைய சேவை என்பது தமிழக பொதுப்பணித்துறையின் மணல் முன்பதிவிற்கான இணையம் மற்றும் செல்லிடப்பேசி செயலி சேவையாகும்.
இந்தச் செயலியை / சேவையை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
• தமிழ்நாட்டில் எவரும் இந்தச் சேவையைப் பயன்படுத்தி மணல் குவாரிகளின் நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிந்துகொண்டு, தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
லாரி உரிமையாளர் : 

லாரி உரிமையாளர் அல்லது ஓட்டுனர் எவ்வாறு முன்பதிவு செய்வது?
• லாரி உரிமையாளர் தன்னைப் பதிவு செய்துகொண்ட பின் தன்னுடைய பதிவுக்கணக்கில் எளிமையாக தன்னிடமுள்ள லாரிகளைச் சேர்த்துக்கொள்ளலாம். பதிவுசெய்யப்பட்ட லாரியின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டவுடன், தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளைத் தேர்வு செய்து பயன்பெறலாம்.
லாரி உரிமையாளரான நான் எத்தனை லாரிகளை இதில் சேர்க்கலாம்?
• லாரிகளைச் சேர்க்க அளவு வரம்புகள் கிடையாது. ஒருமுறை லாரி உரிமையாளராக நீங்கள் பதிவு செய்து கொண்ட பின், நீங்கள் எத்தனை லாரிகளை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
பொது மக்கள் எப்படி மணல் பதிவு செய்வது?
• பொதுமக்கள் தமிழ்நாடு மணல் இணைய சேவைசெயலியில் தங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்துகொண்டு, நடப்பிலுள்ள குவாரி வரிசையில் தங்களுக்கு விருப்பமான வரிசையைத் தேர்வு செய்து மணலை பெற்றுக்கொள்ளலாம்.
எனது கடவுச்சொல்லை மீட்டமைப்பது எப்படி?
• நீங்கள் எங்கள் சேவை மைய எண்ணைத் தொடர்புகொண்டு உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்கலாம்.
எனது முன்பதிவை ரத்து செய்வது எப்படி?
• நீங்கள் முன்பதிவை ரத்து செய்ய இயலாது.
ஒரு லாரிக்கு எத்தனை முன்பதிவுகளை நான் செய்ய முடியும்?
• ஒரு லாரிக்கு ஒரு சமயத்தில் ஒரே ஒரு முறை மட்டும் நீங்கள் முன்பதிவு செய்யமுடியும். முன்பதிவு செய்யப்பட்ட லாரியில் மணல் பெறப்பட்ட பிறகே, மற்றொரு முன்பதிவிற்குத் தகுதி அடையும்.

தமிழ்நாடு மணல் இணைய சேவை பற்றிய சிறப்பு அம்சங்கள்

தமிழ்நாடு மணல் இணைய சேவை பற்றிய சிறப்பு அம்சங்கள்

பொதுமக்கள் நுழைவு

எளிய முறையில் நேரடியாக, பொதுமக்கள் அவர்களுக்கு ஏற்ற குவாரியினை தேர்வு செய்து முன்பதிவு செய்துகொள்ளலாம்

லாரி உரிமையாளர் நுழைவு

எளிமையான முறையில் லாரி உரிமையாளர்கள் இத்தளத்தில் தங்கள் லாரிகளின் விவரங்களை பதிவு செய்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற குவாரியினை தேர்ந்தெடுப்பதோடு அல்லாமல் வரிசை எண், மணல் எடுக்க ஒதுக்கப்படும் நாள் ஆகியவற்றையும் தெரிந்துகொண்டு தகுந்த நேரத்தில் குவாரிக்கு சென்று மணல் பெற்றுகொள்ளலாம்.

வெளிப்படையான வரிசை

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளின் தற்போதைய வரிசை நிலவரங்களை அறிந்துகொள்ளலாம்.
முகப்பு
முன்பதிவு செய்யப்பட்ட லாரியின் காத்திருக்கும் நேரம், உறுதிசெய்யப்பட்ட லாரியின் வரிசை எண், மணல் எடுக்கும் நாள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத லாரிகள் ஆகியவற்றின் விவரங்களை ஒரே திரையின் கீழ் கண்டறிந்துகொள்ளலாம்.

முன்பதிவு

தகுந்த விவரங்களைக்கொண்டு லாரியினை ஏற்ற குவாரியின் வரிசையில் முன்பதிவு செய்துகொள்ளலாம், இவ்வாறு செய்வதினால் அவர்களுக்கு ஒதுக்கப்படும் நாள் அன்று மட்டும் குவாரிக்கு சென்று மணல் பெற்றுக்கொள்ளலாம் மற்ற நேரங்களில் சாலையிலோ அல்லது குவாரியிலோ காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அறிவிப்பு

மணல் எடுக்க அனுமதிக்கப்பட்ட நாள் மற்றும் ஏனைய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.